ஏழு வருட இடைவெளி ஏன்? மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

7 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பணியை தொடங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ஏழு வருட இடைவெளி ஏன்? மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனரும் ஆன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது கணவரும், நடிகருமான தனுஷை பிரிவதாக இருவரும் தங்கள் சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் இந்த அறிவிப்புக்கு பின்னர் ஐஸ்வர்யாவும், தனுஷூம் அவரவர் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 7 வருட இடைவெளிக்கு பிறகு தனது இயக்குனர் பணியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் ’வை ராஜா வை’ படத்திற்கு பிறகு ஏழு வருட இடைவெளி ஏன் என்பது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். 

அதாவது  ‘வை ராஜா வை’ படம் ரிலீஸ் ஆன பிறகு தனக்கு கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் இருந்து படங்கள் இயக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அப்போது குழந்தைகள் மிகவும் சிறியவர்களாக இருந்ததால் தன்னால் அந்த படங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் தற்போது குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிட்டதால் தனது இயக்குனர் பணியை மீண்டும் தொடங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், எதிர்காலத்தில் பாலிவுட் பிரபல நடிகர்களான ஹிருத்திக் ரோஷன், ரன்வீர்சிங் ஆகியோர்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.