சிவகார்த்திகேயனுக்கு அஞ்சனா போட்ட ட்வீட்.. போதையில் இருக்கிறீர்களா என கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகர் சிவகார்த்திகேயன், உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு வீ ஜே அஞ்சனா நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக விராட் கோலியின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு அஞ்சனா போட்ட ட்வீட்.. போதையில் இருக்கிறீர்களா என கலாய்க்கும் நெட்டிசன்கள்

பிரபல தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா. இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளவர் தொகுப்பாளினி அஞ்சனா. 

இவர் கயல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. சில காலங்கள் மீடியாவை விட்டு ஒதுங்கியிருந்த அஞ்சனா தற்போது பல சேனல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அஞ்சனா தன்னுடைய அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது வழக்கம் அதே போன்று பிரபலங்கள் பற்றிய சில கருத்துக்களையும் அவர் ஷேர் செய்து வருவார்.

அந்த வகையில் அஞ்சனா தற்போது ஷேர் செய்த ஒரு ட்வீட் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு வீ ஜே அஞ்சனா நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக விராட் கோலியின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதை கூட சரியாக உங்களால் செய்ய முடியாதா, போதையில் இருக்கிறீர்களா என்று பங்கமாக கலாய்த்து வந்தனர். இதனால் அஞ்சனா அந்த ட்வீட்டை டெலிட் செய்து வேறு ஒரு ட்வீட் போட்டுள்ளார்

அவர் கூறியிருப்பதாவது வேலைக்கு நடுவில் மாற்றி இப்படி ஒரு ட்வீட் போட்டு விட்டேன், அதற்காக இப்படியா கலாய்ப்பது. ஆனால் ஒன்று அனைவரும் ஒரே நினைப்பில் தான் இருக்கிறீர்கள் என்று நல்லாவே தெரியுது என்று அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் அவர் சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார். இதற்கு சிவகார்த்திகேயனும் நன்றி கூறி பதில் ட்வீட் போட்டுள்ளார்.