தேனிலவுக்கு சென்ற மறுநாளே வீடு திரும்பிய ஆர்யன் - ஷபானா..!பிரியப்போகிறார்களா..?குழப்பத்தில் ரசிகர்கள்...

ஆர்யன் ஷபானா இருவரும் பிரியப்போகிறார்களா...? வெளியான அதிர்ச்சி தகவல்

தேனிலவுக்கு சென்ற மறுநாளே வீடு திரும்பிய ஆர்யன் - ஷபானா..!பிரியப்போகிறார்களா..?குழப்பத்தில் ரசிகர்கள்...

சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பெற்ற நடிகை ஷபானாவின் திருமண வாழ்க்கையில் அதற்குள் மனகசப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்யன் ஷபானா இருவரும் பிரியப்போவதாக தகவல் வெளியாகிவருகிறது.

வெள்ளி திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை தான் மக்கள் அதிகம் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான செம்பருத்தி சீரியலில்  நடிகை ஷபானா பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடராக அமைந்தாலும், அதில் ஏழை பெண்ணாக நடித்து ஹீரோ கரம் பிடித்த ஷபானாவிற்கு மக்களின் அதிக அன்பும், ஆதரவும் கிடைத்தது. இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது. 

மும்பையை சேர்ந்த இவர் தமிழ், மலையாள சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கிய ஷபானா பின் செம்பருத்தி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இவர் சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல் போட்டோஷூட் எடுப்பது, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வருவது போன்றவற்றை செய்து வருகிறார்.  மேலும், இவர் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இதனால் இவருக்கு சோஷியல் மீடியாவில் லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். 

இதனிடையே ஷபானா– ஆர்யன் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனைத்தொடர்ந்து, ஷபானா திருமணம் குறித்த தகவலை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் எந்த அறிவிப்பும் இல்லாமல் கடந்த நவம்பர் 11ஆம் தேதி திடீரென திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்தது  குறித்து ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்கள் திருமணத்திற்கு ஷபானா வீட்டில் இருந்து யாரும் வரவில்லை என்று கூறப்பட்டது. 

அது என்னவென்றால், ஷபானா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆர்யன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது திருமணம் இந்துமத முறைப்படி நடந்தது.  இதனால் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் தான் இவர்கள் அவசர அவசரமாகத் திருமணம் முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் திருமணத்தில் ஷபானா பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 

இப்படி ஒரு நிலையில் ஆர்யன் வீட்டில் இந்த  திருமணத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறதாம். திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியும் ஆர்யன் வீட்டிற்கு இன்னும் மணமகள் செல்லவில்லையாம். இதற்கிடையில் தேனிலவுக்காக புதுச்சேரிக்கு சென்ற 4 நாட்கள் சென்ற இவர்கள் அடுத்த நாளே கிளம்பி வந்துவிட்டதாக தகவல் வெளியானது. 

திருமணம் ஆகி ஒரு மாதமே ஆன நிலையில், இவர்களுக்குள் மனக் கசப்பு அதிமாகி கொண்டு செல்வதாக நண்பர்கள் வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதனிடையே ‘நீயா விலகிடு, நாங்க அவனுக்கு (ஆர்யனுக்கு) வேற ஒரு பொண்ணைப் பார்த்திருக்கோம்’ என்கிற ரீதியில் ஆர்யன் வீட்டிலிருந்து ஷபானாவிற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷபானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம எல்லோருமே சில வலிகளை அனுபவிச்சுதான் வந்திருப்போம். பலருக்கு பலவிதமான பிரச்சனை இருக்கு. சிலர் பிரியமான ஒருத்தரை இழந்திருக்கலாம் என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் ஷாபனாவின் இந்த பதிவிற்கு என்ன காரணம் என்று மேலும் குழப்பத்தில் உள்ளனர். 

இதற்கு பிறகாவது ஷபானா ஆர்யன் வாய்திறந்து பேசுவார்களா?இதற்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா? என்று ரசிகர்கள் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.