விக்ரமின் ‘கோப்ரா’ திரைப்படம்...நீதிமன்றம் விதித்த தடை!

விக்ரமின் ‘கோப்ரா’ திரைப்படம்...நீதிமன்றம் விதித்த தடை!

நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியாக உள்ள ’கோப்ரா’ திரைப்படத்தை  சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 31:

செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோவின் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் நடித்துள்ள ’கோப்ரா’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகெங்கிலும் திரைக்கு வரவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்  இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'கோப்ரா’ படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார்.

இதையும் படிக்க: https://malaimurasu.com/posts/entertainment/It-is-reported-that-actor-Syan-Vikram-will-make-an-entry-in-Kannada-too 

வழக்கு தொடர்ந்த உயர்நீதிமன்றம்:

இந்த படத்தை அரசு மற்றும் தனியாரின் 29 இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1788 இணையதளங்களில்  வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்:

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, பல மாதங்கள் உழைப்பில், மிகுந்த பொருட் செலவில், பல போராட்டங்களுக்கு பிறகு படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.

இணையதளத்தில் விட தடை:

இதையடுத்து, வழக்கின் வாதங்களை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, நடிகர் விக்ரமின் 'கோப்ரா’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும்  உத்தரவிட்டார்.