விடுதலை திரைப்படம் ..! சூரியின் பேனருக்கு பாலாபிஷேகம்...!

தமிழ்த்திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக புகழ்பெற்றவரும் நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா சமீப காலகங்களாகவே பல சர்ச்சைக்கு ஆளாகியிருந்தார்.
ரமலத் என்ற பெண்ணை முன்னதாக திருமணம் செய்து இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சமீபமாக தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்த நயன்தாராவும் பிரபுதேவாவும் காதல் வயப்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக தனது முதல் மனைவியை விவாகரத்தும் செய்தார் பிரபுதேவா.
அதன் பின்னர், நயன்தாராவுக்கும் பிரவுதேவாவுக்கும் இடையே சில கருது வேறுபாடுகள் ஏற்பட்ட அவர்களும் பிரிந்தனர். இவர்கள் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்த போதும், பின்னர் பிரிந்த போதும் பலவாரியான சர்ச்சைகள் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
இவ்வாறிருக்க சில மாதங்களுக்கு முன்பு பிரபுதேவா தனது சமூக வலைத்தளங்களில் ஒரு பெண்ணோடு பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுத்த புகைப்படங்கள் வெளியாக மீண்டும் சர்ச்சைக்கு சோறு போட்டார். இது குறித்து சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் எழத்தொடங்கின. நயன்தாராவோடு கிசுகிசுக்கப்பட்ட பிரபுதேவா மீண்டும் ஒரு பெண்ணோடு லிவிங் டுகெதர் உறவில் இருக்கிறாரா என விமர்சனங்கள் வெளியாகின.
இந்த நிலையில், நடிகர் பிரபுதேவா ஹிமானி சிங் எனும் பிசியோதெரபிஸ்டை ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், ஏப்ரல் மாதம் தன் பிறந்தநாளின் போது அவர் ஹிமானி சிங் உடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்து கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதோடு, தனது கடந்த காலங்களில் இருந்த கசப்புகள் நீங்கி தற்போது ஹிமானி சிங் -உடன் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனது மகனுடன் சந்தோஷமாக இருக்கும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அந்த மகிழ்ச்சியில் தான் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்ததாகவும் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிக்க | உதவி தொகை வேண்டுமா? ஆளுக்கு தலா 50ரூ லஞ்சம் கேட்கும் காசாளர்
ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை மலரும் நினைவுகளோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று பார்வையிட்டார்.
இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘களத்தூர் கண்ணம்மா’ என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் கமல்ஹாசன், திமுக எம்பி டி.ஆர் பாலு, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மூத்த நடிகர் சிவகுமார் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த மியூசியம் ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்களாலும் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் உள்ளிட்ட பல பெருமை வாய்ந்த படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது.
1983ல் தமிழில் வெளியான பாயும் புலி என்கிற படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஓட்டிய சுசுகி RV 90, சிவப்பு நிற பழமை வாய்ந்த MG TB கார் மற்றும் 2007ல் வெளியான ‘சிவாஜி ; தி பாஸ்’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமான சிவாஜி சிலை என இவையெல்லாம் இந்த மியூசியத்தில் உள்ள கவனம் ஈர்க்கும் விஷயங்களாகும்.
இந்நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மியூசியத்துக்கு வருகை தந்ததுடன், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மற்றும் எம்எஸ் குகன் ஆகியோருடன் இணைந்து மியூசியத்தை சுற்றிப் பார்த்தார்.
இதையும் படிக்க:லிவ்-இன் உறவு முறை: பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!
சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள சவீதா பல்கலைக்கழகம் இந்திய அளவில் முதலிடம் பிடித்ததை கொண்டாடும் விதமாக மாணவர்கள் உற்சாகமாக நடனம் ஆடியது அனைவரையும் ஈர்க்கும் விதமாக அமைந்தது.
லண்டனை சேர்ந்த யுஎஸ் நிறுவனம் பல்கலைக்கழகங்களுக்கான முன்னிலை தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. கல்வி நிறுவனத்தின் நன்மதிப்பு கல்வியின் தரம், மாணவர்கள், ஆசிரியர்கள் விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் சவிதா பல் மருத்துவமனை இந்திய அளவில் முதல் இடத்தையும் சர்வதேச அளவில் 13 வது இடத்தையும் பிடித்திருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக பல் மருத்துவ கல்லூரி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன கல்லூரியின் வேந்தர் வீரய்யன் அவர்களை பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் வரவேற்று அவருக்கு கிரீடம் அணிவித்து செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு இசைப் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடினர். மாணவர்கள் மட்டுமல்லாது மருத்துவர்களும் கலந்து கொண்டு தங்களின் கலை திறமையை வெளிப்படுத்தினர். தங்கள் கல்லூரி முதலிடம் பிடித்ததை கொண்டாடும் விதமாக மாணவர்களின் கொண்டாட்ட நடனமும் மேளதாள இசையும் அனைவரையும் ஈர்க்கும் விதமாக அமைந்தது.
மேலும் கல்லூரி முதலிடம் பிடித்ததை பறைசாற்றும் விதமாக பதாகைகளை சவிதா பல்கலைக்கழக வேந்தர் வீரன் திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதையும் படிக்க:கரூரில் சாதி பாகுபாடு: கோயிலுக்கு பூட்டு!
ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படத்திற்கு குழந்தைகளுக்கு இலவச டிக்கெட் என அறிவிக்கப்பட்டிருந்ததை நம்பி படம் பார்க்க வந்த குழந்தைகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் உருவாகியுள்ளது வீரன் திரைப்படம். இத்திரைப்படம் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் தமிழ்நாடெங்கும் திரைக்கு வந்தது. இந்த படம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள சினிப்ரியா திரையரங்கில் சத்தியஜோதி தயாரிப்பு நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கு இலவசமாக வீரன் திரைப்படத்தின் காலை 10:30 காட்சி டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் 300க்கும் அதிகமான குழந்தைகள் தங்களது பெற்றோருடன் குவிந்தனர். ஆனால் முறையான அறிவிப்பு இல்லாததால் அதிக அளவில் குவிந்த குழந்தைகளுக்கு திரைப்படத்திற்கான டிக்கெட் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் திரைப்படத்தை காண முடியாமல் குழந்தைகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனையொட்டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் முறையான அறிவிப்பு வழங்கப்படாததால் இவ்வளவு பேர் இங்கு குவிந்ததாக குற்றம் சாட்டினர்.
இதையும் படிக்க:ரயில் பாதையில் டயர் கிடந்த விவகாரம்: குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணரும் போலீஸ்!
வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையான இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிற்பகல் முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வார விடுமுறையான இன்று உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனை அடுத்து காலை முதல் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் பிற்பகல் முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.
குறிப்பாக அரசு தாவரவியல் பூங்காவில் கொட்டும் மழையில் பூங்காவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இதையும் படிக்க:"கோரமண்டல் ரயில் தான் விபத்திற்கு காரணம்" இரயில்வே உயரதிகாரி விளக்கம்!