பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக, தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக, தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை, இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக்கி வருகிறார். இந்த திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக, தமது டுவிட்டர் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் கார்த்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் விரைவில் திரைக்கு வர உள்ளதாக பதிவிட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com