12 லட்ச ரூபாயுடன் வெளியேறிய மாஸ்டர் பட சிபி!!மனைவி கூறியது என்ன...?அதிர்ச்சியில் மக்கள்...

திருமணமான பேச்சிலரே, வீட்டுக்கு வந்து எனக்கு டீ, ஆம்லெட் போட்டு கொடு’

12 லட்ச ரூபாயுடன் வெளியேறிய மாஸ்டர் பட சிபி!!மனைவி கூறியது என்ன...?அதிர்ச்சியில் மக்கள்...

பிக்பாஸ் வீட்டில் இருந்து  12 லட்ச ரூபாயுடன் வெளியேறிய சிபி குறித்து அவரது மனைவி தனது சமூக வலைத்தளத்தில் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் பண பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு போட்டியாளர் வெளியே செல்லலாம் என்று பிக்பாஸ் வாய்ப்பைக் கொடுத்திருந்தார்.

இந்த பணப்பெட்டியை யார் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் இருந்த நிலையில் ஒரு சிலர் தாமரை, அமீர், நிரூப், பாவனி ஆகியோர்களில் ஒருவர் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறிவந்தனர். ஆனால் தாமரை ஆரம்பம் முதலே தான் பணப் பெட்டியை எடுக்க மாட்டேன் என்று உறுதிபட கூறி விட்டார். இதனை அடுத்து அமீர், பாவனி, நிரூப் ஆகிய நால்வரில் ஒருவர் பணப்பெட்டியை எடுக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென 12 லட்சம் ரூபாய் பணப் பெட்டியின் மதிப்பு வந்தவுடன் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு சிபி வெளியேறினார்.  மாஸ்டர் படத்தில் விஜய்யின் மாணவனாக நடித்த சிபி புவனசந்திரனின்  இந்த முடிவு பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்ததுள்ளது எனலாம்.

இந்த நிலையில் சிபியின் இந்த முடிவு குறித்து அவரது மனைவி ஸ்லோகா தனது சமூக வலைத்தளத்தில், பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ‘வழக்கமாக நான் உன்னை பாராட்ட மாட்டேன், ஆனால் இப்போது உன்னுடைய முடிவை நினைத்து நான் சந்தோஷம் அடைகிறேன். உன்னை நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது. நீ தலைநிமிர்ந்து வெளியே வந்து இருக்கிறாய்.

மேலும் திருமணமான பேச்சிலரே, வீட்டுக்கு வந்து எனக்கு டீ, ஆம்லெட் போட்டு கொடு’ என்று குறிபிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.