கோவாவில் பிரபல பெண் நடன இயக்குனர் மரணம் - எப்படி தெரியுமா? திரையுலகினர் அதிர்ச்சி
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் திடீரென மரணமடைந்தது திரையுலகினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோலிவுட் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் தான் டினா சிது. சமீபத்தில் இவர் கோவா சென்றிருந்தார். அங்கு டினா சிதுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரது மரணம் குறித்து சகல நடன இயக்குனர்களும், தெலுங்கு திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடன இயக்குனர் டினாவின் நெருங்கிய நண்பரான சந்தீப் என்பவர், தனது சமூக வலைத்தளத்தில் டீனாவுடன் இருந்த புகைப்படங்களை பதிவு செய்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன் டீனா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் மிகச்சிறந்த நடன இயக்குனர்களில் ஒருவர் என்றும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் சந்தீப் தெரிவித்துள்ளார்.
என்னதான் டினா சிது மாரடைப்பால் உயிரிழந்தார் என்று கூறப்பட்டாலும், இன்னும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
View this post on Instagram
சமையல் கலைஞர்களுக்கான Quizbites 2.0 நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்ற ரிஷிதா மற்றும் அனுஷா
சமையல் கலைஞர்களுக்காக பிரத்யேக சமையல் வினாடி வினா, (QuizBites) குவிஸ்பைட்ஸ் 2.0 சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இஸ்பஹானி சென்ட்ரில் நடைபெற்றது
சவுத் இந்தியன் செஃப் அசோசியேஷன் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 120 சமையல் வல்லுனர்கள் கலந்து கொண்டனர். அணிக்கு இருவர் வீதம் 60 அணிகள் சுவையுணவுக்கலை அறிவு மற்றும் திறமையை இந்த வினாடி வினா போட்டியில் வெளிப்படுத்தினர்.
பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த இந்த போட்டியை SICA வின் தலைவரும், பிரபலமான சமையல் கலை வல்லுனருமான செஃப் தாமு அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருடன் SICA இன் பொதுச் செயலாளர் செஃப் சீதாராம் பிரசாத், இஸ்பஹானி மையத்தின் இயக்குநர் திரு. கேசன், நிகழ்ச்சிக்கான டைட்டில் ஸ்பான்சர் அஞ்சலி ஆயில்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் செந்தில் மற்றும் சென்னைஸ் அமிர்தா சிஇஓ பூமிநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
SICA வின் சிறப்பான ஒருங்கிணைப்பில், தொழில்துறை சமையல் சிறப்பையும், திறமையையும் வெளிப்படுத்தும் தளமாக இந்த வினாடிவினா போட்டி இருந்தது. பாரம்பரிய சமையல், சமையல் நுட்பங்கள் முதல் சமையல் வரலாறு, மற்றும் உலகளாவிய சமையல் வரை பல்வேறு தலைப்புகளைக் கொண்ட போட்டியில்,
திருப்பதியை சேர்ந்த ICI BBA வின் ரிஷிதா, அனுஷா ஜோடி 95 புள்ளிகள் பெற்று முதல் பரிசை வென்றது. 90 புள்ளிகளைப் பெற்ற ஹைதராபாத் கலினரி அகாடமி இரண்டாம் இடத்தையும், திருப்பதி ICI MBA 80 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தை பிடித்தது.
இந்த குவிஸ்பைட்ஸ் 2.O வினாடி வினா சமையல் கலையின் சிறப்பைக் கொண்டாடியது மட்டுமல்லாமல், சமையல் கலைஞர்கள் ஒருவரையொருவர் புரிந்து, ஒத்துழைக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு தளமாகவும் செயல்பட்டது,SICA (SOUTH INDIAN CHEF ASSO.) நடத்திய சமையல் நிபுணர்களுக்கான Quizbites 2.
0 நிகழ்ச்சியில் திருப்பதி, ICI BBA வை சேர்ந்த ரிஷிதா மற்றும் அனுஷா ஆகியோர் முதல் பரிசை வென்றனர்.
சமையல் கலைஞர்களுக்காக பிரத்யேக சமையல் வினாடி வினா, (QuizBites) குவிஸ்பைட்ஸ் 2.0 சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இஸ்பஹானி சென்ட்ரில் நடைபெற்றது.
சவுத் இந்தியன் செஃப் அசோசியேஷன் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 120 சமையல் வல்லுனர்கள் கலந்து கொண்டனர். அணிக்கு இருவர் வீதம் 60 அணிகள் சுவையுணவுக்கலை அறிவு மற்றும் திறமையை இந்த வினாடி வினா போட்டியில் வெளிப்படுத்தினர்.
பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த இந்த போட்டியை SICA வின் தலைவரும், பிரபலமான சமையல் கலை வல்லுனருமான செஃப் தாமு அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருடன் SICA இன் பொதுச் செயலாளர் செஃப் சீதாராம் பிரசாத், இஸ்பஹானி மையத்தின் இயக்குநர் திரு. கேசன், நிகழ்ச்சிக்கான டைட்டில் ஸ்பான்சர் அஞ்சலி ஆயில்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் செந்தில் மற்றும் சென்னைஸ் அமிர்தா சிஇஓ பூமிநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
SICA வின் சிறப்பான ஒருங்கிணைப்பில், தொழில்துறை சமையல் சிறப்பையும், திறமையையும் வெளிப்படுத்தும் தளமாக இந்த வினாடிவினா போட்டி இருந்தது. பாரம்பரிய சமையல், சமையல் நுட்பங்கள் முதல் சமையல் வரலாறு, மற்றும் உலகளாவிய சமையல் வரை பல்வேறு தலைப்புகளைக் கொண்ட போட்டியில்,
திருப்பதியை சேர்ந்த ICI BBA வின் ரிஷிதா, அனுஷா ஜோடி 95 புள்ளிகள் பெற்று முதல் பரிசை வென்றது. 90 புள்ளிகளைப் பெற்ற ஹைதராபாத் கலினரி அகாடமி இரண்டாம் இடத்தையும், திருப்பதி ICI MBA 80 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தை பிடித்தது.
இந்த குவிஸ்பைட்ஸ் 2.O வினாடி வினா சமையல் கலையின் சிறப்பைக் கொண்டாடியது மட்டுமல்லாமல், சமையல் கலைஞர்கள் ஒருவரையொருவர் புரிந்து, ஒத்துழைக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு தளமாகவும் செயல்பட்டது,
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மார்ச் 8 முதல் 'ஹார்ட் பீட்' சீரிஸை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது!!
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மார்ச் 8 முதல் 'ஹார்ட் பீட்' சீரிஸை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது!! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'ஹார்ட் பீட்' சீரிஸை மார்ச் 8 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'ஹார்ட் பீட்' சீரிஸை மார்ச் 8 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், இந்த அசத்தல் அறிவிப்பை, மிக சுவாரஸ்யமான ப்ரோமோ வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது. ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை இந்த சீரிஸ் வழங்கும்.
ஒரு மனிதனின் இதயத்தில் நான்கு அறைகள் இருப்பது போல், மருத்துவமனையில் வேலை பார்க்கும் தனது வாழ்க்கையில், எப்படி நான்கு உலகங்கள் இருக்கின்றன என்பதை, மருத்துவமனையில் முதல் நாள் பணிக்கு வந்த மருத்துவர் ரீனா விளக்குவதை, இந்த ப்ரோமோ வீடியோ காட்டுகிறது.
ரீனா இந்த நான்கு உலகங்களையும் ஒவ்வொன்றாக விளக்குகிறாள், அதில் இறுதி உலகம் அவளுடைய காதல் வாழ்க்கையைப் பற்றியது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் முந்தைய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்களான ‘மத்தகம்’ மற்றும் ‘லேபிள்’ சீரிஸ்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸுக்கு, ரசிகர்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தத் சீரிஸை A Tele Factory நிறுவனம் தயாரிக்கிறது, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த சீரிஸுக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.
இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
https://youtu.be/Kmr5LgtTIF4?si=88l-dpzcYdsJfA5M
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது
நடிகர் சிவகார்த்திகேயனுக்காக தமிழ் கற்ற கேரளப்பாடகி, சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 ல் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் !!
பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை , சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 !! நடிகர் சிவகார்த்திகேயனுக்காக தமிழ் கற்ற கேரளப்பாடகி, சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 ல் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் !! காதல் கல்யாணத்தால் பிரிந்த மகளை, சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 மேடையில் சந்தித்த தந்தை !!
பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை , சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 !!
நடிகர் சிவகார்த்திகேயனுக்காக தமிழ் கற்ற கேரளப்பாடகி, சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 ல் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் !!
காதல் கல்யாணத்தால் பிரிந்த மகளை, சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 மேடையில் சந்தித்த தந்தை !!
தமிழகத்தின் இசை கொண்டாட்டம், சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 ல் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் !!
தமிழகத்தில் இசைத்துறையில் புதிய புரட்சியை உருவாக்கிய, சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன், தற்போது துவங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. எப்போதும் போல், பல அற்புத திறமையாளர்களின் பங்களிப்பில், பல நெகிழ்வான சம்பவங்களுடன், பின்னணி பாடகர்களின் முன்னணி மேடையாக, இந்நிகழ்ச்சி களை கட்டி வருகிறது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் இந்நிகழ்ச்சி மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிய பின்னணியிலிருந்து, இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பல திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் பலர் ஜொலித்து வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும்,சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10 வது சீசன் துவங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள்.
பல பாடகர்களின் முன்னணி மேடையாகத் திகழும் இந்நிகழ்ச்சியின் இந்த 10 வது சீசனில், கர்நாடக சங்கீதப் பின்னணி, கனா பாடல் பின்னணி எனப் பலவிதமான களத்திலிருந்தும் பலவிதமான போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
இம்முறை நடந்துவரும் நிகழ்ச்சியில் பல நெகிழ்வான சம்பவங்கள் நடந்து வருகிறது. கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி, சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேச வெண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, தற்போது தமிழில் எம் ஏ பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். இவரின் குரலும் பாடல்களும் அனைவரது பாராட்டையும் பெற்றது.
வெட்டிங்க் சுற்றில் பலகுரல்களில் பாடி அசத்திய லின்சி எனும் பாடகியின் கதையும் குரலும் பலரையும் நெகிழ வைத்தது. இசையால் காதலித்து இணைந்த தம்பதியாக ஜொலிக்கும் லின்சி தம்பதியின் திருமணத்தை ஒத்துக்கொள்ளாமல் இருந்த, லின்சியின் தந்தை நிகழ்ச்சிக்கு வந்ததோடு, லின்சியை கட்டியணைத்துப் பாராட்டியது அனைவரையும் உருக வைத்தது.
பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களுடன் பரபரப்பாக நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இந்த 10 வது சீசனிலும் களைகட்டி வருகிறது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது.
சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், 'ஹார்ட் பீட்' சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
'ஹார்ட் பீட்' சீரிஸ் இளைஞர்களைக் கவரும் வகையில் நட்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த கலக்கலான பொழுதுபோக்கு சீரிஸாக இருக்கும்.
இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தத் சீரிஸை A Tele Factory நிறுவனம் தயாரிக்கிறது, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த சீரிஸுக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.
இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்
நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர் “ஆத்மா”!
நடிகர் நரேன் நடிப்பில், ஹாரர் திரில்லர் “ஆத்மா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
நடிகர் நரேன் நடிப்பில், ஹாரர் திரில்லர் “ஆத்மா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் "ஆத்மா". இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கிறது. பரப்பரபான பல திருப்பங்களுடன், ஹாரர் கலந்த, மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
ராகேஷ் சங்கர் திரைக்கதை எழுத, இயக்குநர் சுகீத் இப்படத்தினை இயக்கியுள்ளார். K சந்துரு இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
கேள்விக்கான விடைகளை தேடும் நாயகனை மையப்படுத்தி வெளியாகியுள்ள மாறுபட்ட ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
கைதி, விக்ரம் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, ஆட்டிசம் பாதித்த இளைஞனாக இப்படத்தில் முதன்மைப்பாத்திரத்தில் அசத்தியுள்ளார் நடிகர் நரேன். நாயகியாக தில்லுக்கு துட்டு 2 புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன் காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஃபிலிப்பினோவைச் சேர்ந்த நடிக்கைகள் ஷெரீஸ் ஷீன் அகாட், கிறிஷ்டீன் பெண்டிசிகோ ஆகியோர் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் முழுமையாக துபாய் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. துபாயில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.