தமிழகத்தில் மீண்டும் வெளியானது ‘புஷ்பா’...! திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்

மீண்டும் திரையில் வெளியாகி இருக்கும் ‘புஷ்பா’ திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் வெளியானது ‘புஷ்பா’...! திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்
Published on
Updated on
1 min read

தெலுங்கு பிரபலம் அல்லு அர்ஜீன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியானது. இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் உள்ள 50 திரையரங்குகளில்  ‘புஷ்பா’  திரைப்படம் ரிலீஸ் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த பொங்கல் தினத்தையொட்டி திரையரங்குகளில்  8க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. இருந்தபோதிலும் இந்த படங்களின் வசூல் திருப்திகரமாக இல்லை என்றும், கொரோனா காரணமாக  50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்ற நிலையில் 10 முதல் 20% பார்வையாளர்களே திரையரங்குகளில் வந்து கொண்டு இருக்கின்றனர்.

இதன்காரணமாகவே தான்  மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘புஷ்பா’ திரைப்படம் மீண்டும் 50 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளதாகவும் இந்த படத்திற்கு இன்றைய காட்சிகளில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸான போதிலும், திரையரங்குகளில் மீண்டும் ரிலீசாகி இருக்கும்  இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com