இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி...கோரிக்கை விடுத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்!

இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி...கோரிக்கை விடுத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்!

நடிகர் ரஜினிக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் நூதன கோரிக்கை விடுத்துள்ளனா்.  

பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்”. அடுத்தடுத்து இப்படத்தின் 2 சிங்கிள்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், ”காவாலயா” பாடலில் தமன்னாவின் நடனம் பெரும் பாராட்டை பெற்றது. அதனைத்தொடர்ந்து, சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. 

இதையும் படிக்க : வெப்பன் படத்தின் அப்டேட்... AI மூலம் இளம்வயது சத்யராஜ்!

ஜெயிலர் திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நூதன கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதில், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் திரையரங்கிற்கு வந்து படம் பாருங்கள் என கூறி இருந்தார். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினா்,  அனைத்து திரையரங்குகளிலும் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிக்கு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.