இனிமேல் சன் பிக்ச்சர்ஸ் மட்டுமே படம் தயாரிக்கும்... அஜித்தை தவிர எல்லோரையும் வளைத்து டீல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘டாக்டர்' படம் முழுவதுமாக முடிந்து ரிலீஸுக்குத் தயாராகயிருக்கிறது. இதுதவிர அயலான் மற்றும் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பில் ‘டான்' உள்ளிட்ட படமும் ஷூட்டிங்கில் இருக்கின்றன.

இனிமேல் சன் பிக்ச்சர்ஸ் மட்டுமே படம் தயாரிக்கும்... அஜித்தை தவிர எல்லோரையும் வளைத்து டீல்!!
சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் சில திட்டமிடப்பட்டதையும் தாண்டி அதிகம் செலவு செய்யப்பட, அந்தக் கடனை, தன் கடனாக ஏற்றுக்கொண்டு பணத்தை திருப்பிக்கொடுக்கும் பொறுப்பை சிவகார்த்திகேயனே ஏற்றுக்கொண்டார். இதனால் அடுத்தடுத்து படங்கள் செய்து கடனை விரைந்து அடைக்கவேண்டிய சூழலில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
 
இந்தநிலையில் தான் டாக்டர் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்வதற்கும் பிரச்னை வந்தது. இந்தப்படம் கடந்த மார்ச் மாதம் தியேட்டர் ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதனால், இதன் சேட்டிலைட் உரிமையை ஏற்கெனவே சன் டிவிக்கு விற்றுவிட்டார்கள். ஆனால், கொரோனா 2 வது அலை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்க ரிலீஸை தள்ளிவைத்தது ‘டாக்டர்' படக்குழு.
 
2 வது அலையால் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. 2 வது அலையின் தீவிரம் குறைந்து தியேட்டர்கள் பழையபடி திறக்க இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது. அப்படியே திறந்ததாலும் வரிசையாக மெகா பட்ஜெட் படங்கள் லைனில் இருப்பதாலும், பழையபடி கூட்டம் தியேட்டர்களுக்கு வருமா என்பது சந்தேகம் இருப்பதால் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படங்கள் எல்லாம் நேரடி ஓடிடி ரிலீஸுக்குத் ரெடியாக இருக்கிறது.
 
நெல்சன் இயக்கத்தில் தயாரான டாக்டர் படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரும்தொகைக்கு  சேட்டிலைட் உரிமையோடு சேர்த்துக்கேட்டது. ஆனால், இதற்கு முன்பேசேட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கிவிட்டதால் படத்தை திரும்பத் கொடுக்க மறுத்தது. இப்போது இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் தான் சன் டிவியோடு மெகா ஒப்பந்தம் போட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
 
சன் டிவி தயாரிப்பில் அடுத்த 2 வருடங்களில் 5 படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒரு படத்துக்கு 15 கோடி ரூபாய் என 5 படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 75 கோடி ரூபாய் சம்பளம். தற்போதைய கடன் சூழலில் இருந்துவெளிவர இது ஒரு நல்ல டீல் என்பதால் சிவகார்த்திகேயன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாராம்.
 
கொரோனா தொற்று தீவிரம் குறைந்ததும் இந்தப்படங்களின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். சன் டிவி தயாரிக்கப்போகும் சிவகார்த்திகேயனின் அடுத்த 5 படங்களின் இயக்குநர் யார், யார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளது. முதல் படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால், அடுத்த 4 படங்களுக்குமான இயக்குநர்கள் யார் யாரென்பது இன்னும் முடிவாகவில்லை.
 
ஏற்கனவே, சன் பிக்ச்சர்ஸ் விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அதேபோல ரஜினி - சிறுத்தை சிவா கூட்டணி படம் ஒருபக்கம், அதேபோல சூர்யா- பாண்டியராஜ் கூட்டணியில் படம், தனுஷ் - மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கும் படம், அடுத்ததாக ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் படம் என வரிசையாக படம் தயாரித்துக்கொண்டிருப்பதால் இப்போது சிவகார்த்திகேயனும் சன்பிக்ச்சரிடம் 5 படங்களுக்கு கையெழுத்திட்டுள்ளனர். ஆக அஜித்தை தவிர மொத்த டாப் ஸ்டாரையும் வளைத்துவிட்டது சன் பிக்ச்சர்ஸ் குழுமம்.