புதிய அவதாரத்தில் தோன்றும் தோனி!! வெளியானது நாவல் டீசர்!! இணையத்தில் வைரல்

புதிய அவதாரத்தில் தோன்றும் தோனி!! வெளியானது நாவல் டீசர்!! இணையத்தில் வைரல்

கிரிக்கெட் ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படுபவர் தான் எம்.எஸ்.தோனி.  இவருடைய ஆட்ட திறமையால் அனைவரையும் கட்டி போட்டவர். தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர். 

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வந்த  தல தோனி தற்போது ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதிய கதை கிராபிக்ஸ் நாவல் ஒன்றில் தோன்றியுள்ளார்.

 

இந்த நாவல் குறித்த டீசர் வீடியோவை தோனியே தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘அதர்வா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள கிராபிக்ஸ் நாவல் விரைவில் அமேசான தளத்தில் பதிவு செய்யப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து இதுவரை கேப்டனாகவும், திறமையான ஆட்டக்காரராகவும் விளங்கிய தோனியின் இந்த புதிய அவதாரம் வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதுமட்டுமில்லாமல், மிக பிரமாண்டமாகவும் பெரும் பொருட்செலவிலும்  அமைக்கப்பட்டுள்ள இந்த கிராபிக்ஸ் நாவல்,  கிராபிக்ஸ் நாவல் படிக்கும் குழந்தைகளுக்கும், குறிப்பாக தோனி ரசிகர்களுக்கும் இது பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த நாவல் எப்போது அமேசானில் வெளிவரும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.