தமிழில் தான் பேசுவேன் அது தான் அழகாக இருக்கும்....அல்லு அர்ஜூன்....!!

தமிழில் தான் பேசுவேன் அது தான் அழகாக இருக்கும்....அல்லு அர்ஜூன்....!!

நான் பேசும் தமிழ் தவறாக இருந்தாலும், தமிழில் தான் பேசுவேன் அது தான் அழகாக இருக்கும் என நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
Published on

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் புஷ்பா இந்த திரைப்படம் 5மொழிகளில் வெளியாக உள்ளது இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை கோயம்பேட்டில் உள்ள வி.ஆர்.மால் திரையரங்கத்தில் நடைபெற்றது..இந்த நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜுன்,இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்,தயாரிப்பாளர் கலைப்புலி தாணு,ஆர்.பி.செளதரி,பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்...

அதன் பின்னர் பேசிய நடிகர் அல்லு அர்ஜூன் கூறுகையில், 

நான் தமிழில் பேசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது எனவே நான் தமிழில் பேசும் போது ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும் ஆனாலும் நான் தமிழில் தான் பேச போகிறேன்...எனது வாழ்க்கையின் 20ஆண்டுகள் தமிழ் நாட்டில் தான் என்றார்.

சாமே சாமே பாடல் தமிழநாட்டில் வெற்றி பெற்றால் எனக்கு கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவில்லை என பேசிய அவர், என் நண்பர்கள் அனைவரும் கூறுவார்கள் நீ தெலுகு பேசும் தமிழ் பையன் என்று ஆனால் அது தானே உண்மை அதில் எனக்கு பெருமை தான் என கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com