
சென்னையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் மன்ற கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநில, மாவட்ட நிர்வாகிகளை நாளை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தளபதி விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
வாரிசு படம் வெளியாவதில் உள்ள சிக்கல் தொடர்பாக மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள,வாரிசு படத்தை பொங்கலுக்கு வெளியிடலாமா வேண்டாமா என எழுந்துள்ள சர்ச்சையை பற்றி பேச விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் நாளை நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு நடிகர் விஜய் வர உள்ளார்.தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் என அனைவரும் அக்கூட்டத்திற்கு வருவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.