அதிரடியாக உருவாகி வரும் இந்தி விக்ரம் வேதா!!...லக்னோவில் தொடங்கிய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு...!!

அதிரடியாக உருவாகி வரும் இந்தி விக்ரம் வேதா!!...லக்னோவில் தொடங்கிய இரண்டாம் கட்ட  படப்பிடிப்பு...!!

தமிழில் 2017-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'விக்ரம் வேதா' இப்படத்தில் நடிகர் மாதவன், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தினை புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தனர்.

இதே இயக்குனர் குழு இப்படத்தினை இந்தியில் உருவாக்கி வருகின்றனர். அதில் நடிகர்கள் ஹ்ரித்திக் ரோஷன், சாயிப் அலி கான் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை அபு தாபியில் நடத்திமுடித்த படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை லக்னோவில் தொடங்கியுள்ளனர்.

இப்படத்தில் நடிகை ராதிகா ஆப்தே முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை டி-சீரிஸ், ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் உடன் இணைந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரிக்கின்றார். இந்த படம் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.