நதியாவுக்கு என்ன தான் ஆச்சு? வெட்டுக்காயத்துடன் கூடிய புகைப்படம் இணையத்தில் வைரல்!!

நதியாவுக்கு என்ன தான் ஆச்சு? வெட்டுக்காயத்துடன் கூடிய புகைப்படம் இணையத்தில் வைரல்!!
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவில் ‘பூவே பூச்சூடவா’ திரைப்படம் மூலம் கதாநயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நதியா. இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் கொடிக்கட்டி பறந்தவர். 80 மற்றும் 90 - களில் பலரின் கனவு கன்னியாக வலம் வந்தவர். இவர் நடித்த படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக வெற்றியை கண்டது.

இதனைத்தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு ’எம்.குமரன் S/O  மகாலட்சுமி’ என்ற திரைப்படம் மூலம் நடிகர் ஜெயம்ரவிக்கு அம்மாவாக நடித்து சினிமாஇல் ரீஎண்ட்ரி கொடுத்த நதியா, ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார். அந்த படம் வந்த பிறகு ரசிகர்கள் அனைவரும் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் இருந்ததுபோலவே இன்றும் இருப்பதாக கூறி வந்தனர். அதற்கு காரணம் அவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதே என்றும் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.

அந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து வந்த நடிகை நதியா, அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அப்ப்டி தான் எடுக்கும் புகைப்படங்கள், குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் அவர் கையில் வெட்டுக்காயம் இருந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் நதியாவுக்கு என்ன ஆச்சு? கையில் வெட்டுக்காயம் ஏன்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com