அவரு மட்டும் தான் போவாரா?.. நாங்களும் போவோம்ல.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போஸ்டால் அதிர்ந்து போன திரையுலகம்?

தனுஷ் பாலிவுட்டில் கால் பதித்து வரும் நிலையில், தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் களமிறங்கி உள்ளார்.

அவரு மட்டும் தான் போவாரா?.. நாங்களும் போவோம்ல.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போஸ்டால் அதிர்ந்து போன திரையுலகம்?

நடிகர் தனுஷ் இதுவரை 3 பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாலிவுட்டில் ஒரு புதிய காதல் படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த தனுஷ்- ஐஸ்வர்யா, கடந்த சில மாதம் முன்பு பிரிய போவதாக அறிவித்து சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

தனுஷ், 3 பாலிவுட் படங்களில் நடித்திருந்தார் என்பதை ஏற்கனவே மேல குறிப்பிட்டு இருந்தோம்.. அந்த 3 படங்கள் என்ன வென்றால் ராஞ்சனா (அம்பிகாபதி), ஷமிதாப், அட்ரங்கி ரே (கலாட்டா கல்யாணம்). இந்தி ரசிகர்கள் மத்தியில் தனுசு-க்கு கிடைத்த வரவேற்பை பார்த்த அவர், இனி வருடத்திற்கு ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார். தனுஷின் இந்த முடிவுதான் இருவருக்கும் பிரிய காரணம் என கூறப்படுகிறது.

மேலும், தனுஷ்.. ஐஸ்வர்யாவை படங்களை இயக்க விடாமல் தடுத்து வந்ததாகவும், அதற்கு தான் இருவரும் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தொடர்ந்து ஆல்பம் சாங் இயக்குவது, படங்கள் இயக்குவது என ரொம்ப பிசியாகி விட்டார்.

பாலிவுட்டில் தனுஷ் தான் நடிப்பாரா ? நானும் படத்தை இயக்குவேன் என்ற முனைப்போடு களமிறங்கி உள்ளார் ஐஸ்வர்யா... தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக போவதாக அவர் வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சந்தோஷத்தையும் உருவாகியுள்ளது. 'Oh Saathi Chal' என்ற காதல் படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இதில் ஒரு விஷியம் இருக்கு.. அது என்னவென்றால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. இன்னும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னும் பெயர் மாற்றம் செய்யமால், ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயர் தான் வைத்திருக்கிறார்.. இதனால், பாலிவுட் களமிறங்கி உள்ள ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் இணைவதற்கு வாய்ப்புள்ளதோ? என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.