நடிகை மீரா மிதுனுக்கு மீண்டும் பிடிவாரண்ட்.. அது தான் காரணமா? என்ன சம்பவம்?

விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீரா மிதுனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
நடிகை மீரா மிதுனுக்கு மீண்டும் பிடிவாரண்ட்.. அது தான் காரணமா? என்ன சம்பவம்?

பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன், அந்த வீடியோவை  சமூக வலைத்தளத்தில்   வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தில் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து தற்போது வெளியே உள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நடிகை மீரா மிதுன் ஆஜராகாவில்லை. இதனால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ள  நீதிமன்றம், மீரா மிதுனை கைது செய்து வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ஆணையிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com