கேரள அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இயக்குநர் சேரன், தமிழ் மொழிக்கும் இதுபோன்று தனி ஓடிடி தளம் அவசியம் எனக் கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்பட வேண்டும் எனவும், சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம் என பதிவிட்டுள்ளார். அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ள அவர், தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் அவசியம் என கூறியுள்ளார். இந்த பதிவை முதலமைச்சர் ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ உதயநிதி ஆகியோருக்கும் டேக் செய்துள்ளார்.