மாண்டஸ் புயலால் வலுவிழந்த வைகைப்புயல்..!

மாண்டஸ் புயலால் வலுவிழந்த வைகைப்புயல்..!

வடிவேலு ரிட்டன்ஸ்
 
தமிழ் சினிமாவின் பெருமை மற்றும் பொக்கிஷம் என போற்றப்படுபவர் வைகைப் புயல் வடிவேலு. ஏராளமான கதாபாத்திரங்கள் மூலம் நம்மை சிரிக்க வைத்த வைகை புயலுக்கு இடையில் சில பிரச்சினைகள் காரணமாக நடிப்பில் இடைவெளி ஏற்பட்டது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு "நாய் சேகர் ரிட்டன்ஸ்" படத்தின் மூலம் வடிவேலு ரிட்டன் ஆகியுள்ளார். சுராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

மழையால் பாதிப்பு

லைகா தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்து வெளிவரும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில்  மாண்டஸ் புயல் காரணமாக இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்பதால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் காத்து வாங்குகிறது. 

ஏமார்ந்த ரசிகர்கள்

அதுவும் படம் பார்ப்பவர்களை விட யூடியூப் ரிவியூவர்கள் தான் எல்லா திரையரங்குகளிலும் நிறைந்துள்ளனர். மழையால் நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவை திரையில் காணும் ஆசையில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மேலும் வாசிக்க | மனித உயிருக்கு ஆபத்து... ஜல்லிக்கடு வழக்கில் பீட்டா தரப்பு வாதங்களும் நீதிபதிகளின் கேள்விகளும்..!

வடிவேலு படம் என்பதால் வரும் நாட்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயலால் வைகைப் புயலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமான ஒன்றுதான்.