இந்தியாவில் புதிதாக 12,899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

கொரோனா பாதிப்பில் இருந்து 8 ஆயிரத்து 518 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் புதிதாக 12,899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
Published on
Updated on
1 min read

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12 ஆயிரத்து 899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுத்தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று புதிதாக 12 ஆயிரத்து 899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 8 ஆயிரத்து 518 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும்,  கொரோனாவால் பாதிக்கப்பட்ட 72 ஆயிரத்து 474 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13 லட்சத்து 24 ஆயிரத்து 591 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com