ஹிஜாப்புடன் தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு - பொதுத்தேர்வை எழுதாமல் திரும்பினர்!

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி வழக்கு தொடர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவிகள் இன்று இறுதி தேர்வுக்கு ஹிஜாப் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹிஜாப்புடன் தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு - பொதுத்தேர்வை எழுதாமல் திரும்பினர்!
Published on
Updated on
1 min read

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை அணிய கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மனு தாக்கல் செய்த மாணவிகளில் இருவர் பொதுத்தேர்வை எழுத ஹிஜாப் அணிந்து வந்தனர்.

ஆனால் தேர்வு எழுத மனுமதி மறுக்கப்பட்டதால் மாணவிகள் இருவரும் தேர்வை புறக்கணித்து அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறினர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com