நாகாலாந்து, திரிபுராவில் பாஜக தொடர் முன்னிலை...?

நாகாலாந்து, திரிபுராவில் பாஜக தொடர் முன்னிலை...?

3 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், நாகாலாந்து மற்றும் திரிபுராவில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. திரிபுராவின் முதலமைச்சர் மாணிக் சகா, போர்தோவாலி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.


60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதியும், தலா 60 தொகுதிகளை உள்ளடக்கிய நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் கடந்த 27ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து நாகாலாந்தின் அகுலுடோ தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றதால், பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து இன்று 3 மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க : ஈரோடு கிழக்கு மகுடம் யாருக்கு... ? 3 ஆம் சுற்றின் நிலவரம்...

இந்நிலையில், திரிபுராவில் 26 தொகுதிகள் மற்றும் நாகாலாந்தில் 41 தொகுதிகள் என பாஜக முன்னிலை வகித்து வருகிறது. திரிபுராவின் போர்தோவாலி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஆசிஷ் குமார் சஹாவை தோற்கடித்து, பாஜகவின் மாணிக் சஹா வெற்றி பெற்றுள்ளார்.

மேகாலயாவைப் பொறுத்தவரை தேசிய மக்கள் கட்சி 23 தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில், பாஜக 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.