இதனையொட்டி, இன்னும் சற்று நேரத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றுகிறார். முன்னதாக, டெல்லி செங்கோட்டைக்கு வரும் பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் ஆகியோர் வரவேற்கவுள்ளனர். பின்னர், பிரதமருக்கு அளிக்கப்படும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்.