பேருந்தின் பின்பகுதியில் அதிவேகத்தில் வந்து சொகுசு கார் மோதி விபத்து.. சிசிடிவி காட்சிகள்!!

கேரளாவில் தனியார் பேருந்தின் பின்பகுதியில் அதிவேகத்தில் வந்து சொகுசு கார் ஒன்று மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பேருந்தின் பின்பகுதியில் அதிவேகத்தில் வந்து சொகுசு கார் மோதி விபத்து..   சிசிடிவி காட்சிகள்!!

கேரளா மாநிலம் மலப்புறம் அருகே செம்மாடு பகுதி வழியாக குந்தும்புரம் என்ற பகுதிக்கு காலை 8 மணி அளவில் பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

வழக்கமாக பயணிகள் நிறுத்துமிடத்தில் பேருந்து நின்றது. அப்போது அடுத்த சில நிமிடங்களில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று பேருந்தின் பின் பகுதியில் மோதியது.  இதில் காரின் முன்பகுதி முற்றிலுமாக சிதைந்து போனது.

அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மலப்புறம் போலீசார் நடத்திய விசாரணையில் காரின் டிரைவர் தூக்கக்கலக்கத்தில் இருந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த  நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.