இந்தியாவில் ஒரே நாளில் 18,819 பேருக்கு கொரோனா!!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 18,819 பேருக்கு கொரோனா!!

கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 18 ஆயிரத்து 819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று மட்டும் 39 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 13 ஆயிரத்து 827 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

அதே நேரத்தில் இந்தியா முழுவதும் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 555 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் இதுவரை 197 புள்ளி 61 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.