இன்று விசாரணைக்கு வருகிறது ஆர்யன் கானின் ஜாமின் மனு.!!

போதை பொருள் வழக்கில் சிறையில் உள்ள ஆர்யன் கானின் ஜாமீன் கோரிய மனு இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இன்று விசாரணைக்கு வருகிறது ஆர்யன் கானின் ஜாமின் மனு.!!
Published on
Updated on
1 min read

மும்பையில் சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று போதை பொருள்களை பயன்படுத்தியது தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்  கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் எதிர்ப்பை தொடர்ந்து அவரது ஜாமீன் மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆர்யன் கானை விடுவிப்பதற்கு 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com