பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி... பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பிக்கள் குழு கூட்டம்...
பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான இந்திய ரிசா்வ் வங்கி அறிவித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தபோது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், கடந்த மே மாதம் மீண்டும் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதையடுத்து, செப்டம்பர் மாத இறுதிக்குள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எந்தவித படிவம் மற்றும் அடையாள அட்டைகளும் இன்றி வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும், செப்டம்பர் 30-ம் தேதிக்கு மேல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற இயலாது என்றும் தெரிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் உடனே தங்களிடம் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதன்படி, நாட்டின் 93 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள நோட்டுகளையும் மாற்றிக்கொள்ள இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஏற்கனவே மக்களிடையே 2 ஆயிரம் ரூபாயின் நோட்டுகள் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லாத நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து, 3 புள்ளி 32 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ரிசா்வ் வங்கி தொிவித்துள்ளது.
கர்நாடகாவில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தடையை மீறி பல்வேறு இடங்களில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை அம்மாநில போலீசார் கைது செய்து வருகின்றனர்.
கன்னட சலுவலி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், பெங்களூர் டவுன்ஹால் பகுதியில் இருந்து சுதந்திரப் பூங்கா வரை பேரணி செல்ல திட்டமிட்டு பேரணியாக சென்றனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
கர்நாடக மாநிலத்தின் மண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில், விவசாய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. சிக்கமங்களூரு நகரில் முதலமைச்சர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரித்து, கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் திறக்கப்பட்ட கடைகளை மூட வலியுறுத்தி, வாகனங்களை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க : காவிரி கர்நாடகாவின் சொத்து அல்ல...அனைத்து மாநிலங்களுக்கும் காவிரி சொந்தம் - டி.கே.எஸ்.இளங்கோவன்
இதேபோன்று, கர்நாடகாவின் கொப்பள் மாவட்டத்தின், கொப்பள் நகர பேருந்து நிலையம் முன்பு கன்னட அமைப்பினர் இளநீரை கையிலேந்தியவாரு சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முழு அடைப்பு காரணமாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான வணிக வளாகங்களும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பெரும்பாலும் மக்கள் இன்றி காலியாகவே செல்கின்றன.
மணிப்பூரில் கலவரம் நீடித்து வரும் நிலையில் முதலமைச்சர் வீட்டை தாக்க முயற்சித்த போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மணிப்பூரில் மாதக்கணக்கில் நீடித்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதற்காக முதலமைச்சர் பைரேன் சிங்குக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில், இம்பாலில் உள்ள அவரது பூர்வீக வீட்டை நோக்கி ஏராளமான போராட்டக்காரர்கள் நேற்றிரவு திரண்டு வந்தனர்.
வீட்டை தாக்கும் நோக்கில் வந்த அவர்களை, சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே தடுத்து நிறுத்திய போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க | சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக செல்லும் பேருந்துகள் நிறுத்தம்!!
கர்நாடக மாநிலத்தில் முழு கடை அடைப்பு நடைபெறுவதால் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்புகள் கடந்த சில நாட்களாக நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக கொள்ளேகால், சாம்ராஜ் நகர், மைசூர் உள்ளிட்ட கர்நாடகாவுக்கு செல்ல வேண்டிய தமிழக பேருந்துகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து செல்ல வேண்டிய தமிழக பதிவு எண்கள் கொண்ட அரசு பேருந்துகளும் இவை தவிர ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து சத்தியமங்கலம் வழியாக மைசூர் செல்ல வேண்டிய பேருந்துகளும் வராததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு போலீசார் திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்ளை பண்ணாரி சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பண்ணாரி சோதனை சாவடி, காரப்பள்ளம் சோதனை சாவடி, ஆசனூர் தாளவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் ஒப்புதல் அளித்துள்ளளார்.
மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேறியது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உதவும் இந்த மசோதாவுக்கு குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் நேற்று கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தாா்.
இந்த ஒப்புதல் மசோதா பிரதியை ஜகதீப் தன்கரிடம் இருந்து மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அவரது ஒப்புதல் பெற்றவுடன் இந்த மசோதா சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | உலக கோப்பை ஒருநாள் போட்டி: அக்ச அக்ஸருக்கு பதில் அஸ்வின்..!