மகாராஷ்டிராவில் 3 இடங்களில் பாஜக வெற்றி!!

மகாராஷ்டிராவில் 3 இடங்களில் பாஜக வெற்றி!!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் 3 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது.

மகாராஷ்ட்ராவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு 7 பேர் களமிறக்கப்பட்ட நிலையில் அங்கு தேர்தல் நடந்தது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம், பா.ஜ.க. வுக்கு 2 இடம் கிடைப்பது உறுதியான நிலையில் 6வது இடத்தை பிடிக்க சிவசேனா பாஜக இடையே பலப்பரீட்சை நடந்தது. தேர்தல் விதிமீறல் புகாரை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை 8 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின் மீண்டும் தொடங்கப்பட்டது.

இதில் 3 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. பாஜக சார்பில் போட்டியிட்ட பியூஷ் கோயல், அனில் பாண்டே ஆகியோரின் வெற்றி ஏற்கெனவே உறுதியான நிலையில் சிவசேனா வேட்பாளருடனான போட்டியில் பாஜக வேட்பாளர் தனஞ்சய் மகாதிக் வெற்றி பெற்றார். எஞ்சிய 3 இடங்களில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கிடைத்துள்ளது.