கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் கர்நாடக அமைச்சர்கள், பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.