இந்தியா
படகு போக்குவரத்துக்காக திறக்கப்பட்ட பாம்பன் பாலம்...!
ராமேஸ்வரத்தில் படகுப் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட பாம்பன் பாலத்தை, 50க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கடந்து சென்றன.
பாம்பன் பாலம் :
தமிழ்நாட்டுடன் ராமேஸ்வரத்தை இணைக்கும் 108 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் பாலத்தில், நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது, சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, பாலத்தில் ரயில் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலத்தை கடந்த மீன்பிடிப் படகுகள் :
இந்நிலையில், படகுப் போக்குவரத்திற்காக பாம்பன் பாலம் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் பாலத்தை கடந்து செல்கின்றன.