வீட்டில் கட்டு கட்டாக பணம் பதுக்கிய தொழிலதிபர் கைது... ரூ.257 கோடி பறிமுதல்...

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், வரி ஏய்ப்பு செய்ததாக தொழிலதிபர் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் கணக்கில் வராத 257  கோடி ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றினர்.
வீட்டில் கட்டு கட்டாக பணம் பதுக்கிய தொழிலதிபர் கைது... ரூ.257 கோடி பறிமுதல்...
Published on
Updated on
1 min read

கான்பூரில், வாசனை திரவியம்  தொழிற்சாலை நடத்தி வரும்  தொழிலதிபர் பியூஸ் ஜெயின் என்பவர் வரி ஏய்ப்பு செய்து அதிகப்படியான பணம் பதுக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 23ம் தேதி முதல் தொடர்ந்து 120 மணி நேரம் அவரது வீடு, அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் 257 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததும், 16 விலை உயர்ந்த சொத்துக்களை வாங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பியூஷ் ஜெயினிடம் சுமார் 50 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்து, பணம் மற்றும் சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com