மீன் கடைக்குள் தறிகெட்டு புகுந்த கார் - சம்பவ இடத்திலேயே அசாம் தொழிலாளி பலி.. சிசிடிவி காட்சி!

பேருந்து மோதியதில் கட்டுபாட்டை இழந்த மினி லாரி கடைக்குள் புகுந்ததன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மீன் கடைக்குள் தறிகெட்டு புகுந்த கார் - சம்பவ இடத்திலேயே அசாம் தொழிலாளி பலி.. சிசிடிவி காட்சி!
Published on
Updated on
1 min read

கேரள மாநிலம் பாலக்காட்டில் பேருந்து மோதியதில் கட்டுபாட்டை இழந்த மினி லாரி கடைக்குள் புகுந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலக்காட்டில், வேரிக்காடு என்னும் பகுதியில் மினி லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த கேரள அரசு பேருந்து, மினி லாரியின் பின் பக்கத்தில் மோதியதில் கட்டுபாட்டை இழந்த லாரி சாலையோர கடைக்குள் புகுந்தது. இதில் சாலை ஓரம்  நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர்  படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் மினி லாரியை பேருந்து முந்த முயன்ற போது பிரேக் செயலிழந்ததால் மினி லாரியின் மீது மோதியதாக பேருந்து ஓட்டுனர் தெரிவித்துள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com