ஆட்டோவை முந்த முயன்று கவிழ்ந்த பேருந்து.. செவிலியர் பலியான பரிதாபம்!!

கேரளாவில் ஆட்டோவை முந்த முயந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஆட்டோவை முந்த முயன்று கவிழ்ந்த பேருந்து..  செவிலியர் பலியான பரிதாபம்!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் இருந்து தலசேரி வழியாக நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.. குற்றிக்கோல் என்ற பகுதியில் வரும் போது ஆட்டோ ஒன்றை இந்த தனியார் பேருந்து முந்த முயன்றுள்ளது.. அதும் அதிவேகத்தில்.. 

இதில் கட்டுபாட்டை இழந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த  நர்ஸ் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்கள் அடைந்த   மீதமிருந்த பயணிகளை பொதுமக்கள் மீட்டு கண்ணூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

படுகாயங்கள் அடைந்த மீதமிருந்த பயணிகளை பொதுமக்கள் மீட்டு கண்ணூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் விசாரணையில் இறந்த செலியர்  கண்ணூரை சேர்ந்த ஜோபியா ஜோசப் என்பது தெரியவந்துள்ளது. 

பேருந்தை ஓட்டுநர் அதிவேகத்தில் இயக்கியதால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் விபத்தின் CCTV காட்சிகளும் வெளியாகியுள்ளன.