நேருக்கு நேர் மோதிய கார்கள்: இருவர் உடல் நசுங்கி பலி!

ஹைதராபாத் ஸ்ரீசைலம் அருகே காரும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேருக்கு நேர் மோதிய கார்கள்: இருவர் உடல் நசுங்கி பலி!
Published on
Updated on
1 min read

ஹைதராபாத் ஸ்ரீசைலம் அருகே காரும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் ஸ்ரீசைலம் இடையே எட்டு வழி தேசிய நெடுஞ் சாலை உள்ளது. ஆனாலும் பொதுமக்கள் வழக்கமாக சாலை விதிகளை மீறி எதிர் திசையில் பயணிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் நாகர் கர்னூல் அருகே  தேசிய நெடுஞ்சாலையில் எதிரெதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் நேருக்கு நேருக்கு மோதி கொண்டது.

இந்த விபத்தில் இரண்டு கார்களிலும் பயணித்தவர்களில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.  இரண்டு பேர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கர்னூல் போலீசார்  உயிரிழந்தவர்க ளின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com