54 மாணவர்களுக்கு கொரோனா- விடுமுறை அறிவித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள சைதன்யா கல்லூரியில் பயின்று வரும் 54 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
54 மாணவர்களுக்கு கொரோனா- விடுமுறை அறிவித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவு
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள சைதன்யா கல்லூரியில் பயின்று வரும் 54 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கர்நாடக எல்லை அருகேயுள்ள அனேக்கல் பகுதியில் சைதன்யா என்ற தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பிற்கு பின் மாணவர்களுக்கு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் 54 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com