இந்தியாவில் புதிதாக இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா? - 13 பேர் பலி!

இந்தியாவில் புதிதாக  இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா? - 13 பேர் பலி!

இந்தியாவில் தினசரி பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார  அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 487 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 692 ஆக குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் தொற்றிலிருந்து மீள முடியாமல் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 ஆயிரத்து 878 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருப்பதாகவும், இதனால் தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 79 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  தற்போது வரை 191 கோடியே 32 லட்சத்து 94 ஆயிரத்து 864 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது.