கொரோனாவுக்கு ஒரே நாளில் 2000 பேர் பலி: அதிர்ச்சி ரிப்போர்ட்!  

மத்திய பிரதேசத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இன்றைய தினசரி பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 2000 பேர் பலி: அதிர்ச்சி ரிப்போர்ட்!   
Published on
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இன்றைய தினசரி பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 20 பேர் உயிரிழந் திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வுக்கு நேற்று 724 பேர்  பலியாகியிருந்த நிலையில் இன்று கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது சர்ச்சையை கிளப்பியது.

மத்திய பிரதேசத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை திருத்தப்பட்டு அறிவிக்கப்படாத உயிரிழப்புகள் கணக்கில் சேர்த்ததே இந்த திடீர் உயர்வுக்கு காரணம் என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதன்படி மத்திய பிரதேசத்தில் மட்டும் ஆயிரத்து 481 கொரோனா உயிர் பலிகள் இன்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com