இந்தியாவில் ஒரே நாளில் 16,159 பேருக்கு தொற்று பாதிப்பு.. தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு!!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 16,159 பேருக்கு தொற்று பாதிப்பு.. தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு!!
Published on
Updated on
1 min read

இந்தியாவில் கொரோனா பாதிப்பு முந்தைய நாள் பாதிப்பை விட 23 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று 16 ஆயிரத்து 159 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய நாளை விட பாதிப்பு நேற்று 23 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், ஒரே நாளில் 28 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 212 பேராக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கொண்ட 77 வயது பெண், கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com