
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, பின்னர் குணமடைந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.