நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி - எஃப் 12 ராக்கெட்....!

நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி - எஃப் 12 ராக்கெட்....!

ஜி.எஸ்.எல்.வி எப்- 12 ராக்கெட் நாளை காலை இந்தியாவின் இரண்டாம் தலைமுறை நேவிகேசன் செயற்கை கோளான NVS-01-னுடன் விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நாளை பி.எஸ்.எல்.வி-எப் 12 ராக்கெட் ஆனது இந்திய நேரப்படி 10.42 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.  

நேவிகேசன் எனப்படும் இட தரவுகள் குறித்த தகவல்களை பெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமைதாக ஒன்றாக இருக்கும் நிலையில், இஸ்ரோ மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து நேவிகேசன் செயற்கைகோள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. NVS-01 செயற்கைக்கோள் நேவிகெசன் இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோள்களில் முதன்மையானது. புவிநிலைச் சுற்றுப்பாதையில் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு நிலை, வேகம், இடம்’ மற்றும் நேர தகவலை துல்லியமாக வழங்க முடியும் என கூறப்படுகிறது. 

ISRO to launch NVS-01 navigation satellite on May 29 - The Hindu

இந்த செயற்கைக்கோள் சுமார் 2,232 கிலோ எடையுடையது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே தங்கள் சொந்த நேவிகேசன் அமைப்புகளைக் கொண்ட நாடுகளாக இருக்கும் நிலையில் NVS-01 செயற்கோள் மூலம் இந்தியாவும் தனித்துமான நேவிகேஷன் அமைப்பை பெரும் என கூறபடுகிறது. மே 29 (நாளை) திங்கட்கிழமை காலை 10:42ல் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏவுதலுக்கு ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் தயார் நிலையில் இருப்பதாகவும், ராக்கெட் ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பும் பணிகளும், கவுண்டவுனும் தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் மூலம் நிலத்திலும் கடற்பரப்பிலும் பயணிக்கும் இடத்தையும் தொலைவையும் மிகவும் துல்லியமாக கணிக்க முடியும் என கூறப்படுகிறது.

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் பொறுத்த வரை 51.7 மீட்டர் உயரமும் 420 டன் உந்துவிசை எடையும் கொண்ட பிரம்மாண்டமான ராக்கெட்டாகும். மேலும் இந்த பயணம் ஜி.எஸ்.எல்.வி வகையை ராக்கெட்டின் 15ஆவது விண்வெளி பயணம் ஆகும்.

இதையும் படிக்க      |   "வீழ்ந்த நேரத்திலும் எழுச்சி பெற்ற நாடு ஜப்பான்" முதலமைச்சர் பெருமிதம்!