கோவாவிற்கு வளர்ச்சியே தேவை- அரவிந்த் கெஜ்ரிவால்

கோவாவிற்கு நேர்மையான அரசியலே தேவை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கோவாவிற்கு வளர்ச்சியே தேவை- அரவிந்த் கெஜ்ரிவால்
Published on
Updated on
1 min read

கோவாவிற்கு நேர்மையான அரசியலே தேவை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 கோவா சட்டமன்ற தேர்தலுக்கு உட்பட்ட 40 தொகுதிகளில், அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது.  இதில் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இன்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் அங்கு சென்று, உத்தரகாண்டில் அளித்தது போல் கவர்ச்சி பிரச்சார வாக்குறுதிகளை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தனது பயணத்தை டிவிட்டர் வாயிலாக உறுதி செய்திருந்த அவர், பாஜக மற்றும் காங்கிரஸ் மோசமான அரசியலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

எம்எல்ஏக்கள் வாங்கி, விற்கப்பட்டது போதும் என குறிப்பிட்டிருந்த அவர், மக்கள்  வளர்ச்சியையும் விரும்புவதாகவும், அங்கு நிதி பற்றாக்குறை இல்லை மாறாக நேர்மையான நோக்கம்தான் தேவை எனவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com