"ஓய்வு பெறும் அக்னி வீரர்களுக்கு அரசு வேலை" - அரியானா முதல்வர் அதிரடி

ஓய்வு பெறும் அக்னி வீரர்களுக்கு நிச்சய அரசு வேலை வழங்கப்படும் என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

"ஓய்வு பெறும் அக்னி வீரர்களுக்கு அரசு வேலை" - அரியானா முதல்வர் அதிரடி

ராணுவத்தில் குறுகிய காலம் சேவையாற்றும் வகையில் அக்னிபத் என்னும் புதிய திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

ஆனால் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அக்னிபத் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஓய்வு பெறும் அக்னிவீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். ராணுவத்தில் ஓய்வு பெற்று திரும்பும் அக்னிவீரர்களுக்கு குரூப் சி வேலையாக இருந்தாலும் சரி அல்லது அரியானா காவல்துறையாக இருந்தாலும் சரி அவரவர் விரும்பும் பணியில் பணியாற்றலாம் என மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.