
சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரான நடிகை அனன்யா பாண்டேவிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆர்யன் கானுக்கு போதைப்பொருள் வாங்க உதவி செய்வதை குறிக்கும் வகையிலான வாட்ஸ்அப் உரையாடல் தொடர்பாக விசாரிக்கப்பட்டது. ஆனால், போதைப் பொருள் பயன்பாடு, மற்றும் சப்ளை தொடர்பான குற்றச்சாட்டை அனன்யா பாண்டே மறுத்துள்ளார். இதனையடுத்து, நாளை மறுநாள் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி, நடிகை அனன்யா பாண்டேவுக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.