வெளிநாடு பயணம் செல்கிறீர்களா மத்திய அமைச்சக அறிவிப்பை கவனத்தில் கொள்ளுங்கள்!!!

வெளிநாடு பயணம் செல்கிறீர்களா மத்திய அமைச்சக அறிவிப்பை கவனத்தில் கொள்ளுங்கள்!!!

பயணத்தின் போது முகமூடியை அணிவது மற்றும் ஒருவருக்கொருவர் சமூக இடவெளியைக் கடைப்பிடிப்பதும் கட்டாயமாகும்.  

நீங்கள் வெளிநாட்டு பயணத்திற்கு செல்கிறீர்கள் என்றால், முதலில் தடுப்பூசியின் நிலையை சரிபார்க்க வேண்டும்.  இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டு தடுப்பூசியை முடித்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார துறை அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.  கோவிட்-19 காரணமக வெளிநாட்டு பயணம் தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் திருத்தியுள்ளது.

மத்திய அமைச்சகத்தின் அறிக்கையின் படி, கொரோனா வழக்குகள் தொடர்ந்து குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள் முதலில் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

பயணத்தின் போது முகமூடியை அணிவது மற்றும் ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதும் கட்டாயமாகும்.  பயணத்தின் போது ஒரு பயணி காய்ச்சல் அல்லது கொரோனா அறிகுறிகளைக் காட்டினால், அவர் மற்ற பயணிகளிடமிருந்து பிரித்து அமர வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நோயாளி விமான நிலையத்தை அடைந்த பிறகு தனிமைப்படுத்தப்படுவார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   இந்தியாவில் இன்றுவரை 100% வாக்குபதிவான கிராமம்....எங்கு உள்ளது? எப்படி சாத்தியம்?