மக்களவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு...!!

மக்களவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு...!!
Published on
Updated on
1 min read

ராகுல் பதவி நீக்கம், அதானி விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு  மார்ச் 13ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இன்றைய கருப்பு உடை அணிந்து வந்த  எதிர்கட்சியினர் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தி சபாநாயகரை முற்றுகையிட்டு முழக்கம் வலியுறுத்தினர். இதனால் மக்களவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  

நேற்றும் இரு அவைகளும் கூடிய போது ராகுல்காந்தி பதவிநீக்கத்தை திரும்பப் பெறுவது, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாக பதாகைகளுடன் எதிர்கட்சிகள் முழக்கமிட்டன. பாஜகவும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். 

இதனால் தொடங்கப்பட்ட 5 நிமிடங்களிலேயே இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மக்களவை 2 மணிக்கு கூடியதும், பதாகைகளை வைத்து சபாநாயகரை மறைத்தும் முழக்கங்கள் எழுப்பியும் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இன்று காலைவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று காலை கூடிய மக்களவை எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com