சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை...

சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை...

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மகர விளக்கு தரிசன நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது. பூஜையின் போது, ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதியாய் காட்சி அளிப்பார்.

அப்போது பக்தர்களின் சரண கோஷம் விண்ணை பிளக்கும். மகர ஜோதியை தரிசிக்க கடந்த இரண்டு நாட்களாகவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஜோதியை தரிசிக்க காட்டுப்பகுதியில் முகாமிட்டு தங்கி உள்ளனர். இன்று ஜோதி தரிசனம் முடிந்த பின்னரே அவர்கள் மலை இறங்குவார்கள். இதனால் சன்னிதானத்திலும், காட்டு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com