நெதர்லாந் பெண்ணிடம் சேட்டையை காட்டிய மசாஜ் சென்டர் ஊழியர் கைது... என்ன பண்ணார் தெரியுமா?

நெதர்லாந் பெண்ணிடம் சேட்டையை காட்டிய மசாஜ் சென்டர் ஊழியர் கைது... என்ன பண்ணார் தெரியுமா?
Published on
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஆயுர்வேத மசாஜ் சென்டரில் நெதர்லாந்தை சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மசாஜ் சென்டர் ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஜெய்ப்பூர் கதிபுராவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மசாஜ் சென்டரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், ராஜஸ்தானுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில், மசாஜ் சென்டர் ஊழியர் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிஜ்ஜூ என்று தெரியவந்தது. இதையடுத்து தன் மேல் வழக்கு பதிவு செய்திருப்பதை அறிந்த மசாஜ் சென்டர் ஊழியர் கேரளாவிற்கு தப்ப முயன்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து குற்றவாளியை மடக்கி பிடித்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com