யோகி மீது கடும் கோபத்தில் மோடி.. காரணம் என்ன?

யோகி மீது கடும் கோபத்தில் மோடி.. காரணம் என்ன?

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிறந்த நாளையொட்டி, டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் மோடியால் பா.ஜ.க.வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தலைவர்களின் பிறந்தநாளின் போது, பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி பதிவிடுவார். ஆனால், நேற்று யோகி ஆதித்யநாத்தின் பிறந்த நாளுக்கு, எந்த வித வாழ்த்தும் பதிவிடவில்லை.

இந்த சம்பவம் பா.ஜ.க.வினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது பா.ஜ.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் யோகி ஆதித்யநாத் மீது  விமர்சனங்கள் உள்ள நிலையில், வரும் தேர்தலில் யோகி ஆதித்யநாத்திற்கு பதிலாக வேறு நபரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.