‘ஜாம்பி’ பட பாணியில் உத்தரகாண்ட் பள்ளியில் 3 ஆண்டாக தொடரும் மர்மம்!!

‘ஜாம்பி’ பட பாணியில் உத்தரகாண்ட் பள்ளியில்  3 ஆண்டாக தொடரும் மர்மம்!!

‘ஜாம்பி’ பட பாணியில், உத்தரகாண்டில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் விசித்திரமாக நடந்து கொள்ளும் சம்பவம் பெற்றோர் மற்றும் கல்வி அதிகாரிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜாம்பி’ பட பாணியில் நடக்கும் சம்பவம்:

உத்தரகாண்ட் மாநிலம் பஞ்சப்ஹர் பகுதியில்  அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இப்பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் கடந்த செவ்வாய் கிழமை விநோதமாக நடந்து கொண்டனர். மாணவிகள் சிலர் தரையில் அமர்ந்தபடி தலையை சுவற்றில் மோதிக்கொண்டும், மண்ணில் உருண்டும் சத்தமிட்டபடியும் இருந்ததால் ஆசிரியர்கள் கடும் அச்சத்துக்குள்ளாகினர்.

3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதே சம்பவம்:

இதேபோல் நேற்றும் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குழந்தைகளின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மாணவிகள் அதுபோல் நடந்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அல்மோரா, பிதோராஹர், சம்மோலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளிலும் இதுபோல் மாணவர்கள் வெறித்தனமாக நடந்து கொண்டதாகவும், 3 ஆண்டுகளுக்கு முன்னரும் இதே பள்ளியில் இச்சம்பவம் அரங்கேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.